Posts

AI எனும் ஏழாம் அறிவு

Image
  AI செயலிகளின் அசாத்திய திறன் மீதான பிரம்மிப்பும், அவை மனிதர்களின் வேலையை பிடுங்கிக் கொண்டு துரத்தியடிக்கும் என்ற பயமும் ஒரு சேர நம்மை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டம். இப்படியான சூழலில் தமிழில் AI குறித்து வந்திருக்கும் முக்கியமான புத்தகம் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய “AI எனும் ஏழாம் அறிவு” புத்தகம். ஏஐ யின் ஆரம்பகட்டம் ,அத்துறையில் உண்டான படிப்படியான முன்னேற்றங்கள், அதன் இன்றைய அசுரப் பாய்ச்சல் என எல்லாவற்றையும் விரிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாகவும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இருந்து இப்புத்தகம் துவங்குவது நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் அளிக்கலாம்.ஆனால் அது அப்படித்தான் துவங்கியிருக்க வேண்டுமென புத்தகத்தை வாசிக்கிற போது புரிந்து கொள்ள முடியும். அப்போரில் தான் AIக்கான முதல் விதை ஆலன் டூரிங்கால் போடப்பட்டது. ஆனால் அதற்கு ஆலன் டூரிங் சந்தித்த இடர்களும் சவால்களும் ரொம்பவே அதிகம். போரின் போது படைகளுக்கு செய்திகளை அனுப்ப புது முறையை கையாள்கிறது ஹிட்லரின் ஜெர்மானிய ராணுவம். அதற்காக எனிக்மா என்னும் இயந்திரத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் அனுப்புகிற ச

800

Image
 இன்றைய கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பேட்டிங்கிற்காகவே பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்டிங்கை கொண்ட போட்டிகளாலும், பேட்ஸ்மென்களாலும்தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்பதே உண்மை. அப்படியொரு காலத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னரைப் பற்றி திரைப்படம் நமக்கு என்ன உற்சாகம் தந்துவிடப் போகிறதென்று நிறைய பேர் நினைக்கலாம். எனில் அவர்கள் முரளியின் வாழ்க்கையைச் சொல்லும் 800 திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும். விளையாட்டு வீரர்களைப் பற்றிய திரைப்படங்களில் இப்படத்திற்கு கண்டிப்பாக ஒரு தனி இடம் கிடைக்கும். முரளியின் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமில்லாது , அதில் தலைசிறந்த இடத்தைப் பிடிக்க அவர் எத்தனை தூரம் போராட வேண்டியிருந்தது என்பதையும் , கிரிக்கெட்டுக்கு வெளியே முரளி எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதையும் தான் இப்படம் முக்கியமாக நமக்குக் காட்டுகிறது. முரளி 800 விக்கெட் எடுக்கிற கடைசி போட்டியின் போது ஒரு பத்திரிக்கையின் தலைமை எடிட்டர் நாசருக்கும் ,இன்னொரு பத்திரிக்கையாளருக்குமான உரையாடலாகவே இப்படம் தொடங்கும் வாழ்நாள் முழுவதும் தனது பௌலிங் ஆக்சனுக்காகவும் தன் இனத்திற்காகவ

மண்ணில் உப்பானவர்கள்

Image
தண்டியாத்திரை அல்லது உப்புசத்தியாகிரகம். இவ்விரு வார்த்தைகளையும் நிச்சயம் அனைவரும் கடந்து வந்திருப்போம்.  அதைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது தான். ஆனால் எல்லோருமே அதன் தீவிரத்தையும் ,அன்றைய காலத்தில் அதன் தேவையையும், அது மக்களிடையே உண்டாக்கிய தாக்கத்தையும் உணர்ந்திருப்பதன் சாத்தியங்கள் குறைவு. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு நடந்து சென்று, ஒரு பிடி உப்பை கையில் அள்ளுவதன் மூலம், சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் அரசை பயம் கொள்ள வைக்க முடியுமா எனத் தோன்றுவது இயல்பு தான். ஆனால் அதுவே நடந்தது. இப்போராட்டத்தின் அத்தனை தகவல்களையும் ,அவ்வளவு விரிவாகவும் நுட்பமாகவும், அதேநேரத்தில் உணர்ச்சிகரமாகவும் தனது ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சித்ரா பாலசுப்ரமணியன்.  இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமே, அதன் கட்டமைப்பு தான். போராட்டம் பற்றிய தகவல்களுக்கு முன், அதில் காந்தியுடன் பங்கு பெற்ற ,நாம் கவனிக்கத் தவறிய அல்லது மறந்து போன களச்செயல்பாட்டாளர்கள் அத்தனை பேரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார் சித்ரா. ஒவ்வொரு நாளும் காந்தி பயணித்த ஊர்கள், அங்கே நடந்

கேள்வி எண் 17182

Image
 நான் பணிசெய்கிற மென்பொருள் துறையில் ,முக்கியமான வேலை செய்கிற ஆனாலும் பெரிதாக கண்டுகொள்ளப் படாத ஒரு சாரார் உண்டு. அவர்கள் டெஸ்டிங் குழுவைச் சேர்ந்தவர்கள். டெவலப்பர்கள் நிரல் எழுத, ஒவ்வொரு பகுதியாக அதை சோதனை செய்து கொண்டே இருப்பர் டெஸ்ட்டர்கள். இரு குழுவும் கிட்டத்தட்ட போரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலத் தான் மனதளவில் எண்ணிக் கொள்வார்கள். கடினப்பட்டு மணிக்கணக்காக நிரல் எழுதி தான் உருவாக்கிய மென்பொருளில் , குறைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது டெவலப்பருக்கு கோபம் உச்சத்தில் ஏறும்.  இருக்கிற பணியின் நடுவே அந்தக் குறைகளையும் சரிசெய்து ,அதன்பின் பாதியில் விட்ட பணியையும் தொடர்ந்து ப்ராஜக்டை முடிப்பதற்குள் தலைவலி தான். நாம் இவ்வளவு வேலை செய்கிறோமே, இவன் சுலபமாக குறை கண்டுபிடிக்கிறானே, இவனால் தான் ப்ராஜக்டே நகர மாட்டேன் என்கிறது என்று மனம் கொதிக்கும். குறை கண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேலையா என்று தோன்றும். ஒருவேளை நம்மை தனிப்பட்டு பழிவாங்குகிறானோ என்று கூடத் தோன்றும்.  ஆனால் கொஞ்சம் விலகி நின்று பொறுமையாக யோசித்தால் புரியும் .  அந்தக் குறைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்

சிறுதெய்வங்கள் வெறும் கற்கள்தானா ?

Image
  இது பெரும்பாலானோருக்கு நடந்திருக்கலாம். பதின் வயது முடிந்து இருபதுகளுக்குள் நுழைகிற காலம். ஒரு ஆவேசம் பொங்கும். என்னடா இது இத்தனை கடவுள்கள், தேவையற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள். இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்தி வாழப்போகிறார்களோ என்பது மாதிரி. முக்கியமாக சிறு தெய்வ ,மூதாதைய வழிபாடுகளின் போது தோன்றும் இந்த எண்ணம் மேலோங்கும். எங்கோயோ காட்டுக்குள்ளும் புதருக்குள்ளும் கடினப்பட்டு நடந்து ஒரு கல்லைக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே என ஒரு ஒவ்வாமை. அவர்களை மீட்டு நல்வழிப் படுத்த தோன்றியவன் நான் என நினைக்கிற ஒரு காலம். ஆனால் அதையெல்லாம் கடந்து, நாம் எவ்வளவு பிரம்மாண்ட ஒரு தொடர்ச்சிக்குள் இருக்கிறோமென்றும், வழிபாடுகளின் ஏன் தேவையென்றும் புரிந்து கொள்ள கொஞ்சம் காலமும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம். மனித உருவாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியை உள்ளடக்கியது. உங்கள் வீட்டில் மாட்டியிருக்கிற தந்தை அல்லது பாட்டனின் புகைப்படத்திற்குப் பின்னால் எத்தனை ஆயிரம் முன்னோர் மறைந்திருப்பார்கள். அவர்கள் நமக்கு எத்தனை அளித்துச் சென்றிருப்பார்கள். அந்த தொடர்ச்சியை உதறி, நம் வேர்களை

இன்சமாம் மற்றும் பிறர்

Image
  இன்று போல் எல்லாம் இல்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை தொடர்களில் வருடத்திற்கொரு முறை மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்கின்றன. ஆனால் இரு அணிகளும் சரளமாக மாறி மாறி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயணித்து ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் ஆடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.   ஆச்சரியம் என்னவெனில் தொடக்கப்பள்ளியில் படிக்கிற வயதிருந்த எனக்கு தேசப்பற்றையெல்லாம்  தாண்டி ,அன்றைக்கு ஆடிய பாகிஸ்தான் அணியை ரொம்பவே பிடிக்கும். பாகிஸ்தானுக்கும், இந்தியா தவிர இன்னொரு அணிக்குமான ஆட்டமென்றால் ,சந்தேகமின்றி பாகிஸ்தான் பக்கமே மனது நின்றது. இந்தியாவுக்கு எதிரான சில ஆட்டங்களில் கூட பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். : ) கிரிக்கெட்டின் எந்த நுணுக்கமும் தெரியாத அந்த வயதில் ஏன் அப்படி அவர்களை பிடித்தது என யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணமும் பிடிபடவில்லை. வியப்பாகத்தானிருக்கிறது. ஹூம்.  இன்றைக்கும் பாகிஸ்தான் அணி கொஞ்சமும் பலமிழக்கவில்லை. அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு நாம் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த வீரர்கள் அந்த அணியில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள். சரி, பள்ளி வயதில் நான்

உண்மையான காதல்

Image
இந்த வருடத்தில் படித்த முதல் புத்தகம். அராத்து எழுதிய உண்மையான காதல். ஒரே அமர்வில் படித்து முடிக்கக் கூடிய குறுநாவல். ஆனால் அது சொல்ல வருகிற விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானதும், அதே நேரத்தில் முக்கியமானாதும் கூட. காதல் தோல்வியால் வேதனையிலிருக்கிற ஒருவரை அவரது நண்பர்கள் சேர்ந்து தேற்றுகிற முயற்சியில் ஈசிஆரில் இருக்கிற ஒரு பங்களாவுக்குச் செல்கிறார்கள்(பார்ட்டிக்கு தான்). அங்கே நண்பர்கள் மத்தியில் நடக்கிற உரையாடல், ஒவ்வொருவரும் காதல் என்பதற்கு தாங்கள் நினைக்கிற விளக்கத்தையும் ,சில காதல் அனுபங்கள் மூலம் அவர்களுக்கு கிடைத்த புரிதல்களையும் சொல்லி விவாதிக்கிறார்கள். இறுதியில் கொஞ்சம் கலவையான மனவோட்டங்களுடன் தான் நாம் நாவலை படித்து முடிக்க முடிகிறது. ஆனால் நிஜத்தில், அது அப்படி மட்டுமே இருக்க முடியும். காதலைப் புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதில்லை என்பதுதான் நாம் அடைய வேண்டிய புரிதல். அந்தப் புரிதலை நோக்கித் தான் இந்த நாவலும் அதில் வருகிற ஒவ்வொரு உரையாடலும் நம்மை இட்டுச் செல்கிறது. முக்கியமாக அஸ்வத் கதாபாத்திரம். நண்பர் குழுவில் சீனியர். சில காதல்கள், அதன் பரவசங்கள் , திருமண முறிவு,விவாகரத்து என