சில வருடங்களாக அமேரிக்கர்கள் வியந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்கும் பெயர் ”கே.ஆர்.ஸ்ரீதர்”.யார் இந்த ஸ்ரீதர்? என்ன செய்தார்? இவர் கண்டறிந்த ப்ளூம் எனெர்ஜி(Blomm Energy) என்னும் ஆற்றல் உலகையே இவர் பக்கம் திருப்பியுள்ளது. ”என்னய்யா இது! இந்த மின்சாரத்தைத் தயாரிக்க தான் இத்தனைப் பாடா? அணுசக்தியாம்,அனல்மின் நிலையமாம்,ஜெனெரேட்டராம்.இதனால் சுற்றுச் சூழலுக்கு எத்தனைப் பாதிப்பு தெரியுமா? ஒன்றும் செய்ய வேண்டாம்.என்னோடு வா.பெட்டியை எடு ,இணைப்பைக் கொடு,மின்சாரத்தைப் பெறு,முடிந்தது வேலை” இதுதான் இவரது சித்தாந்தம்.ஸ்ரீதர் திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில்(NIT) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.பின் மேற்படிப்பிற்காக அமேரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.அங்கு நியூக்லியர் டெக்னாலஜி துறையில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று அங்கிருந்து வெளியேறினார்.ஸ்ரீதர் செய்த சிறந்த ஆராய்ச்சிகளுக்காக நாசா அவரைத் தன்னுடைய ஆராய்ச்சியாளார் குழுவில் இணைத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்(Aero space technologies)
Posts
Showing posts from 2014
ஹிட்லர்
- Get link
- Other Apps
முகில் எழுதிய ஹிட்லர் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். "என்னடா இது ?440 பக்கங்கள் என்று சொன்னார்களே ?இவ்வளவு விரைவில் படித்துவிட்டோமே .பலே அசோக் " என்ற பிரமிப்புதான் என்னை முதலில் பற்றிக்கொண்டது.மின்னல் வேகத்தில் செல்லும் மொழி நடை முகிலுக்குறியதே.அவரது எழுத்தில் ஏதோ மாயங்களும் மந்திரங்களும் தோன்றி நம்மை புத்தகத்தோடு கட்டி விடுகின்றன.நடுவில் வந்த அத்தியாயங்களை பயத்துடனும் நடுக்கத்துடனுமே படித்தேன். "எங்கே ஹிட்லர் ஃப்ரான்சுக்கு அடுத்தபடியாக ் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து விடுவாரோ ?எங்கே நாஜி வீரர்கள் படித்துக் கொண்டிருக்கும் நம்மை சுட்டுக் கொன்று விடுவார்களோ?" என்ற அச்சமே ஏற்பட்டுவிடுகிறது.இதற்கு காரணம் ஹிட்லரின் எழுச்சியா ?அல்லது முகிலின் எழுத்தா என்பது குழப்பத்திற்கு உரியதே. யூதப்படுகொலைகளை நேரில் கண்டது போல் ஓர் உணர்வு.என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்.அந்த பாதிப்பு இன்னும் அகளவில்லை.அந்தக் காட்சிகள் என்னை விட்டு மறைய மறுக்கின்றன.ஆனால் இன்றைய மகிழ்ச்சியான ஐரோப்பாவை பார்க்கும்போது ,பேரானந்தம்.. ஹிட்லரைப் பற்றிய புத்தகம் தானே அவரை கதாநாயகனாக மட்டுமே சித்தர
பாலர் பள்ளி
- Get link
- Other Apps
எனக்கு பாடங்களை நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு ."First impression is best impression ".ஆனால் நான் நினைப்பது " First school is best school". நான் படித்த அந்த முதல் பள்ளிக்கூடம் என் வீட்டருகே இருக்கும் மணிவாசகர் பாலர் பள்ளி.அங்கு ஒரு வருடம் படித்தேன் .படிப்பை விட விளையாட்டும் தூக்கமும் தான் முக்கிய பாடங்கள்.அங்கிருந்த ஆசிரியையின் பெயர் நினைவில் இல்லை .அவரிடம் எனக்குப் பிடித்த ஒரு செயல் ,அவர் யாரையும் அடித்து நான் பார்த்ததில்லை.மாணவர்கள் அனைவரையும் கண்ணா என்று அழைத்ததாக தான் என் நினைவில் உள்ளது.அந்த பள்ளியில் ஓர் அருமையான விதி உண்டு .மாணவர்கள் எல்லோரும் மதியம் தூங்க வேண்டும்.எங்களை தூங்க வைக்க படாத பாடு படுவார் ஆசிரியை.அங்கே நடந்த சுவையான நிகழ்வுகள் பல நினைவு இன்னும் நினைவு இருக்கிறது.பிறகு நான் அந்த வழியாக செல்லும்போது பலமுறை அந்த பள்ளிக்குள் பார்ப்பேன் .அதே ஆசிரியை .மாணவர்கள் வேறு .அவர் பாடல்களைச் சொல்ல சிறுவர்கள் அதைத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார்கள் .கடைசியாக போன வருடம் பார்த்தபோது அதன் கதவு மூடப்பட்டிருந்தது.அந்த
மகாத்மா
- Get link
- Other Apps
இன்று மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன் .தமுக்கம் மைதானத்தினுள் நுழைந்ததும் என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது.அனைத்து ஸ்டால்களிலும் நுழைந்து பார்த்தேன் .சில புத்தகங்களை வாங்கினேன்,சிலவற்றின் முன்னுரையை மட்டும் படித்துவிட்டு அடுத்த வருடம் வாங்கி கொள்ளலாம் என நினைத்துக் கொண்டேன்.இறுதியாக ரூபாய் 500ல் 7 புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது.அருகில்தான் காந்தி மியூசியம் உள்ளதென என்றோ ஒருநாள் கேள்விப் பட்டிருக்கிறேன்.காந்தியைப் பற்றி அதிகம் படித்திருந்தாலும் நேரே சென்று பார்த்தது வித்தியாசமாக இருந்தது.காந்திபங்குகொண்டபல வரலாற்று நிகழ்வுகளின் புகைப்படங்களும் அங்கே இருந்தன.கடைசியில் இருந்த ஓர் அறை.அதன் வாயிலில் இருந்த பலகை. "இந்த அறையில் மகாத்மா காந்தி உபயோகித்த பொருள்கள் உள்ளன" உள்ளே விரைந்தேன்.காந்தி பயன்படுத்திய கரண்டி,கண்ணாடி,படித்தபுத்தகங்களின் மாதிரி என பல பொருள்கள் இருந்தன.ஒர் மூலையில் இருந்த கண்ணாடி கூண்டினுள் ஒரு வேஷ்டி இருந்தது .அருகில் சென்றேன்.பலகையைப் பார்த்தேன் .ஆம்.காந்தியினுடையது தான்.அந்த மனிதர் சுடப்பட்ட போது அணிந்திருந்த அதே வேஷ்டிதான்.அப்பொழுது ஏற்பட்ட உணர்
இயேசு என்றொரு மனிதர் இருந்தார்
- Get link
- Other Apps
வணக்கம் , சில தினங்களுக்கு முன் நண்பர் சுந்தரின் உதவியால் பைபிள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பைபிள் .உலகத்தின் மிகப்பிரபலமான புத்தகம் தான்.ஆனால் அப்புத்தகத்தின் முதல் பக்கமே முழு பிழையாய் இருப்பதாக உணர்கிறேன். இதுதான் அந்த முதல் பக்கத்தின் சுருக்கம்தான் இது . "கடவுள் நிலம் உண்டாகட்டும் என்றார்,நிலம் உருவானது . கடல் உண்டாகட்டும் என்றார்,கடல் உருவானது. பகல்,இரவு உண்டாகட்டும் என்றார்,உருவாயின. உயிரினங்கள் உண்டாகட்டும் என்றார்,உயிரினங்கள் பிறந்தன ." இப்படியாக பல "ஆகட்டும்"களைக் கூறி முழு உலகையும் சில நொடிகளில் படைத்துவிட்டார்.ஆனால் இவைகளைப் படிக்கும்பொழுது குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதைகளை போலத்தான் தோன்றுகிறது . என்னுள் பல கேள்விகளும் எழுகிறது.இவ்வளவு பெரிய,அகண்ட,பிரம்மாண்டமான உலகம் எப்படி இப்போது உள்ளது போல் சகஜமான சூழலில் தோன்றியது?எப்படி இவற்றை கடவுளால் ஒரு நொடியில் உருவாக்க முடிந்தது?ஆதிமனிதர்களான ஆதாம்,ஏவாளால் பிறரிடமும் கடவுளிடமும் எப்படி உரையாட முடிந்தது?ஒரு நொடியில் அவர்களுக்கான மொழியை உருவாக்கிக் கொண்டார்களா?கொஞ்சம் பொறுங்கள்,இன்னொன்றும் இடிக்கிறதே ?
பாபு மற்றும் ரவி
- Get link
- Other Apps
அன்று காலை மணி 7.00.சென்னையின் சேரி பகுதி.ஓரு மூலையில் இருந்த குடிசை.உள்ளிருந்து எழுந்து வந்தான் பாபு.இன்னும் தூக்கம் முழுவதுமாக களையவில்லை. "எவண்டா இந்த ஸ்கூல கண்டுபுடிச்சது.பெரிய தொல்லையா இருக்கு" என எல்லா சிறுவர்களையும் போல முணுமுணுத்து விட்டு குளிக்கச் சென்றான்.குளித்தவுடன் சூடாக இரண்டு இட்லி வைத்தார் அவன் அம்மா . "அம்மா பசிக்குது.இன்னும் ஒரே ஒரு இட்லி வைம்மா. "கண்ணா மாவு தீர்ந்து போச்சுடா.நாளைக்கு சாப்புடலாம் .செல்லமுல "என்றார் அம்மா. சாப்பிட்டு முடித்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான் பாபு.தினமும் நடந்துதான் போக வேண்டும்.அவனது தந்தையும் தாயும் கட்டிட வேலை செய்பவர்கள்.அதனால் வருமானம் மிக குறைவு.பாபு தன் அப்பாவிடம் பலமுறை சைக்கிள் வாங்கித் தர சொல்லி அழுதிருக்கிறான்.ம்ஹூம் .ஒன்றும் நடந்த பாடில்லை.அடுத்த வாரம் வாங்கி விடலாம் என சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பார்..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பாபு.அவனுக்கு தோழர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.அதனால் எப்போதுமே தனிமை தான்.தனிமை மட்டும் தான்.அந்த த