கணிதத்தின் கதை
இரா நடராஜன் எழுதிய கணிதத்தின் கதை . கணிதத்தை மிக மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் தமிழின் ஒரே நூல் இது மட்டுமே . இன்று பள்ளிகளில் , அதுவும் முக்கியமாக கணிதப் பாடவேளைகளில் ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களை நோக்கிச் சொல்வது . ” இந்த கணக்கெல்லாம் உனக்கு வாழ்க்கையில் உபயோகப் படப்போகுதா . பித்தாகரஸ் தியரமும் , லேப்லாஸ் தியாரமும் எங்கும் பயன்படப்போவதில்லை . பள்ளிக்கூடம் எதுக்கு வர ? முதலில் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள் . கையைக் கட்டு . வாயைப் பொத்து ” இந்த கருத்தைத் தான் மிகப்பலாமக உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம் . கணிதம் என்பது நமது வாழ்க்கையில் அவசியமான , அத்தியாவசியமான ஒன்று . அது இல்லாமல் எதுவும் இல்லை . ஆம் . கணிதம் இரத்தத்தைப் போல , காற்றைப் போல நம்மோடு கலந்திருக்கிறது. இந்நூலில் கணிதத்தின் வரலாறு மிகத் துள்ளியமாக பதிவு செய்யப் பட்டுள்ளது . எண்களின் தோன்றுதலில் இருந்து புத்தகம் தொடங்குகிறது . செவ்விந்தியர்கள் , பாபிலோனியர்கள் , மாயன்கள் , எகிப்தியர்கள் , கிரேக்கர்கள் , ரோம் மக்கள் என ஒவ்வொரு இனக்குழு மக்களும் , ஒவ்வொரு விதமான எண்களையும் , பொருள்களையும் எண்ணும் முறையை...