மகாத்மா
இன்று மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன் .தமுக்கம் மைதானத்தினுள் நுழைந்ததும் என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது.அனைத்து ஸ்டால்களிலும் நுழைந்து பார்த்தேன் .சில புத்தகங்களை வாங்கினேன்,சிலவற்றின் முன்னுரையை மட்டும் படித்துவிட்டு அடுத்த வருடம் வாங்கி கொள்ளலாம் என நினைத்துக் கொண்டேன்.இறுதியாக ரூபாய் 500ல் 7 புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது.அருகில்தான் காந்தி மியூசியம் உள்ளதென என்றோ ஒருநாள் கேள்விப் பட்டிருக்கிறேன்.காந்தியைப் பற்றி அதிகம் படித்திருந்தாலும் நேரே சென்று பார்த்தது வித்தியாசமாக இருந்தது.காந்திபங்குகொண்டபல வரலாற்று நிகழ்வுகளின் புகைப்படங்களும் அங்கே இருந்தன.கடைசியில் இருந்த ஓர் அறை.அதன் வாயிலில் இருந்த பலகை. "இந்த அறையில் மகாத்மா காந்தி உபயோகித்த பொருள்கள் உள்ளன" உள்ளே விரைந்தேன்.காந்தி பயன்படுத்திய கரண்டி,கண்ணாடி,படித்தபுத்தகங்களின் மாதிரி என பல பொருள்கள் இருந்தன.ஒர் மூலையில் இருந்த கண்ணாடி கூண்டினுள் ஒரு வேஷ்டி இருந்தது .அருகில் சென்றேன்.பலகையைப் பார்த்தேன் .ஆம்.காந்தியினுடையது தான்.அந்த மனிதர் சுடப்பட்ட போது அணிந்திருந்த அதே வேஷ்டிதான்.அப்பொழுது ஏற்பட்ட உணர்