
சில வருடங்களாக அமேரிக்கர்கள் வியந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்கும் பெயர் ”கே.ஆர்.ஸ்ரீதர்”.யார் இந்த ஸ்ரீதர்? என்ன செய்தார்? இவர் கண்டறிந்த ப்ளூம் எனெர்ஜி(Blomm Energy) என்னும் ஆற்றல் உலகையே இவர் பக்கம் திருப்பியுள்ளது. ”என்னய்யா இது! இந்த மின்சாரத்தைத் தயாரிக்க தான் இத்தனைப் பாடா? அணுசக்தியாம்,அனல்மின் நிலையமாம்,ஜெனெரேட்டராம்.இதனால் சுற்றுச் சூழலுக்கு எத்தனைப் பாதிப்பு தெரியுமா? ஒன்றும் செய்ய வேண்டாம்.என்னோடு வா.பெட்டியை எடு ,இணைப்பைக் கொடு,மின்சாரத்தைப் பெறு,முடிந்தது வேலை” இதுதான் இவரது சித்தாந்தம்.ஸ்ரீதர் திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில்(NIT) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.பின் மேற்படிப்பிற்காக அமேரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.அங்கு நியூக்லியர் டெக்னாலஜி துறையில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று அங்கிருந்து வெளியேறினார்.ஸ்ரீதர் செய்த சிறந்த ஆராய்ச்சிகளுக்காக நாசா அவரைத் தன்னுடைய ஆராய்ச்சியாளார் குழுவில் இணைத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்(Aero space technologies)...