ஆலன் டூரின் - கடித்த ஆப்பிள்

இன்று ஆப்பிள் நிறுவனம் கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக(LOGO) கொண்டிருப்பதன் காரணம் இவர் தான் . இவர் பிரிட்டனைச் சேர்ந்த கணிதவியல் ஆராய்ச்சியாளர் ஆலன் டூரின் . ஆலன் கணினி பொறியியலிலும் மிகச்சிறந்து விளங்கியவர் . சென்ற நூற்றாண்டில் கணினிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் . இரண்டாம் உலகப்போரின் போது இவர் தான் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் . ஜெர்மன் நாஜிப் படைகள் தங்களுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த செய்திகளை நடுவிலேயே வழிமறித்து , அதை DECODE செய்தார் ஆலன். ஆனால் DECODE செய்வதென்பது எளிதான வேலை அல்ல. அதற்கு மிகச்சிறந்த கணித , அறிவியல் அறிவு தேவை. ஆலனிடம் அது இயல்பாக இருந்தது. நாஜிக்களின் செய்தியை DECODE செய்ததன் மூலம் , அடுத்து பிரிட்டனின் எந்தப் பகுதியைத் தாக்குவதற்கு ஹிட்லர் திட்டமிடுகிறார் என்ற ரகசிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது . அதன்மூலம் பல பிரிட்டன் மக்களின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால் இத்தகைய சாதனை செய்த ஆலன் டூரினுக்கு வரலாறு வேறு விதமாக வாழ்க்கையை அமைத்து விட்டது. அப்போது பிரிட்டனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் . அப்போது ஆலனும் ஓரினச்சேர்க்கையாளர் தான் என்ற சந்தேகம் ஏற்பட்டு, பிரிட்டன் அரசு அவரை சிறையில் தள்ளியது . ஆனால் அவர் செய்த மாபெரும் சாதனைகளை மறந்து அவருக்கு தண்டனை கொடுத்தனர் . அவமானத்தால் மனமுடைந்து போனார் ஆலன்.நஞ்சை ஒரு ஆப்பிளுக்குள் செலுத்தி , அப்பகுதியை கடித்து உண்டு தற்கொலை செய்து கொண்டார் . ஆனால் அவருடைய சாதனையை மறக்க முடியுமா ? ஆலனின் கம்ப்யூட்டர் திறமையினால் ஈர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ் . அதனால் தான் தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக வைத்து , ஆலனை எப்போதும் நினைவு படுத்துகிறார் .

~அசோக் ராஜ் .

From Steve jobs biography by Walter issacson.

 

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை